செய்திகள்
மின்சாரம் நிறுத்தம்

நாகூர், வேளாங்கண்ணியில் நாளை மின்தடை

Published On 2020-06-29 11:56 GMT   |   Update On 2020-06-29 11:56 GMT
நாகூர், வேளாங்கண்ணியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
நாகப்பட்டினம்:

நாகை உதவி செயற்பொறியாளர் மலர்வண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை துணைமின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் வங்காரமாவடி, நாகூர் தர்கா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணிவரை மின்வினியோகம் இருக்காது. இதேபோல் வேளாங்கண்ணி துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் வேளாங்கண்ணி நகர், செருதூர், பரவை ஆகிய பகுதிகளிலும், வேட்டைக்காரனிருப்பு துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் திருப்பூண்டி, புதுப்பள்ளி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு, கோவில்பத்து, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, தாமரைகுளம் ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News