செய்திகள்
திருமணமான 4 மாதங்களில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
வேதாரண்யம் அருகே திருமணமான 4 மாதங்களில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள கரியாப்பட்டினம் நடுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தபாபு(வயது33). இவருக்கும் பட்டுக்கோட்டையை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் அபிநயா(29) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் அபிநயா வீட்டில் சேலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து சுப்பிரமணியன் கரியாப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிநயாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அபிநயாவுக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆவதால் நாகை வருவாய் கோட்டாட்சியர் பழனிக்குமார் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.