செய்திகள்
தாக்குதல்

டீக்கடை உரிமையாளர் மீது தாக்குதல்- 4 பேர் கைது

Published On 2020-06-27 10:13 GMT   |   Update On 2020-06-27 10:13 GMT
மணல்மேடு அருகே டீக்கடை உரிமையாளரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மணல்மேடு:

மணல்மேடு அருகே நாராயணமங்கலம் தெற்கு தெருவில் குணசேகரன் என்பவர் டீக்கடை வைத்து நடத்திக்கொண்டு வருகிறார். இவரது கடை முன்பு நாராயணமங்கலம் கீழத்தெருவை சேர்ந்த ஜீவா (வயது23) தினமும் வந்து நின்று கொண்டு போனில் தகாதவார்த்தைகளால் திட்டி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை குணசேகரன் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜீவா, அவரது ஆதரவாளர் ஹரிஹரன் (30), தினகரன் (25), தினேஷ்குமார் (21) உள்பட 6 பேர் சேர்ந்து குணசேகரனை தாக்கினர். இதனை தடுக்க வந்த குணசேகரனின் மகள் ரேவதிக்கும்(35) கொலைமிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீவா, ஹரிஹரன், தினகரன், தினேஷ்குமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் வழக்கு தொடர்பாக தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News