செய்திகள்
கொரோனா வீரியம் அதிகரிப்பு- பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க கலெக்டர் வேண்டுகோள்
2-வது அலையில் கொரோனா வைரசின் வீரியம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கலெக்டர் கதிரவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சி சார்பில் காய்கறி வியாபாரிகள், கால்டாக்சி டிரைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றது. மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலையில் மொத்தம் 33 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 14 பேர் சிகிச்சையில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 19 பேர் வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். தினமும் 1,100 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றது.
வெளியிடங்களில் இருந்து வருபவர்களை முதலில் பரிசோதனை செய்துவிட்டு வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு தான் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
கொரோனா 2-வது அலையில் வைரசின் வீரியம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சமூக இடைவெளி கடைபிடித்தல், முக கவசம் அணிவது, சுகாதாரமாக இருப்பது, 2 மணி நேரத்திற்கு ஒரு முறை கைகளை சுத்தப்படுத்துவது உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்த வரை ஊரடங்கு தேவையில்லை. ஆனால் அதே வேளையில் 7 மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்திற்குள் கட்டுப்பாடுகளை விதிப்பது அவசியமாகிறது. இது தொடர்பாக அரசிடம் வலியுறுத்தப்படும்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு மாநகராட்சி சார்பில் காய்கறி வியாபாரிகள், கால்டாக்சி டிரைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றது. மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலையில் மொத்தம் 33 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 14 பேர் சிகிச்சையில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 19 பேர் வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். தினமும் 1,100 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றது.
வெளியிடங்களில் இருந்து வருபவர்களை முதலில் பரிசோதனை செய்துவிட்டு வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு தான் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
கொரோனா 2-வது அலையில் வைரசின் வீரியம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சமூக இடைவெளி கடைபிடித்தல், முக கவசம் அணிவது, சுகாதாரமாக இருப்பது, 2 மணி நேரத்திற்கு ஒரு முறை கைகளை சுத்தப்படுத்துவது உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்த வரை ஊரடங்கு தேவையில்லை. ஆனால் அதே வேளையில் 7 மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்திற்குள் கட்டுப்பாடுகளை விதிப்பது அவசியமாகிறது. இது தொடர்பாக அரசிடம் வலியுறுத்தப்படும்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.