செய்திகள்
தற்கொலை

கொளப்பள்ளியில் வாலிபர் தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2020-06-24 14:05 GMT   |   Update On 2020-06-24 14:05 GMT
நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பந்தலூர்:

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டம்(ரேஞ்ச் எண்.1) பத்துலைன்ஸ் பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரது மகன் ராமதாஸ்(வயது 26). ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

தற்போது ஊரடங்கால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இதற்கிடையில் ராமதாஸ் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணம் அடையவில்லை என தெரிகிறது.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராமதாஸ், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சேரம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News