செய்திகள்
முகக்கவசம்

ஈரோடு மாநகர் பகுதியில் முக கவசம் அணியாத 8 ஆயிரம் பேருக்கு அபராதம்

Published On 2020-06-23 20:58 IST   |   Update On 2020-06-23 20:58:00 IST
ஈரோடு மாநகர் பகுதியில் இதுவரை முக கவசம் அணியாமல் வந்த 8 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. முதல் முறை முக கவசம் அணியாமல் வந்தால் ரூ.100 அபராதமும், அதே நபர் 2-ம் முறை முக கவசம் அணியாமல் வந்தால் ரூ.500 அபராதமும், 3-வது முறையாக அணியாமல் வந்தால் அவர் கைது நடவடிக்கைக்கு உள்ளாவார் எனவும் மாவட்ட நிர்வாகத்தினர் எச்சரித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து மாநகராட்சி சார்பில் 4 மண்டலங்களிலும் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டு முக கவசம் அணியாதவர்கள் மீது அபராதம் விதித்து வருகிறார்கள்.

ஈரோடு மாநகர் பகுதியில் இதுவரை முக கவசம் அணியாமல் வந்த 8 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News