செய்திகள்
ஈரோடு மாநகர் பகுதியில் முக கவசம் அணியாத 8 ஆயிரம் பேருக்கு அபராதம்
ஈரோடு மாநகர் பகுதியில் இதுவரை முக கவசம் அணியாமல் வந்த 8 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. முதல் முறை முக கவசம் அணியாமல் வந்தால் ரூ.100 அபராதமும், அதே நபர் 2-ம் முறை முக கவசம் அணியாமல் வந்தால் ரூ.500 அபராதமும், 3-வது முறையாக அணியாமல் வந்தால் அவர் கைது நடவடிக்கைக்கு உள்ளாவார் எனவும் மாவட்ட நிர்வாகத்தினர் எச்சரித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து மாநகராட்சி சார்பில் 4 மண்டலங்களிலும் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டு முக கவசம் அணியாதவர்கள் மீது அபராதம் விதித்து வருகிறார்கள்.
ஈரோடு மாநகர் பகுதியில் இதுவரை முக கவசம் அணியாமல் வந்த 8 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. முதல் முறை முக கவசம் அணியாமல் வந்தால் ரூ.100 அபராதமும், அதே நபர் 2-ம் முறை முக கவசம் அணியாமல் வந்தால் ரூ.500 அபராதமும், 3-வது முறையாக அணியாமல் வந்தால் அவர் கைது நடவடிக்கைக்கு உள்ளாவார் எனவும் மாவட்ட நிர்வாகத்தினர் எச்சரித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து மாநகராட்சி சார்பில் 4 மண்டலங்களிலும் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டு முக கவசம் அணியாதவர்கள் மீது அபராதம் விதித்து வருகிறார்கள்.
ஈரோடு மாநகர் பகுதியில் இதுவரை முக கவசம் அணியாமல் வந்த 8 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.