செய்திகள்
விபத்து பலி

கறம்பக்குடி அருகே விபத்தில் வாலிபர் பலி

Published On 2020-06-23 16:06 IST   |   Update On 2020-06-23 16:06:00 IST
கறம்பக்குடி அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறம்பக்குடி:

கறம்பக்குடி அருகே உள்ள துவார் கெண்டையன்பட்டி பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் மனநலம் பாதித்த நிலையில் சுற்றித்திரிந்தார். நேற்று காலை புளியமரம் பஸ் நிறுத்தம் அருகே அவர் நடந்து சென்றபோது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து மழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News