செய்திகள்
ஈரோட்டில் பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
ஈரோட்டில் பணம் வைத்து சூதாடியது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு தென்றல்நகர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது சிலர் வட்டமாக அமர்ந்து சூதாடிக்கொண்டு இருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், ஈரோடு லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த ஹரிஹரகோகுல் (வயது 24), பெரியசேமூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (29), முனிசிபல் காலனியை சேர்ந்த ரமேஷ்குமார் (50), ஈ.பி.பி. நகரை சேர்ந்த ஆனந்தன் (35), கே.ஏ.எஸ்.நகரை சேர்ந்த சேட்டு (42), வீரப்பன்சத்திரம் தெப்பகுளம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (37), சத்யா வீதியை சேர்ந்த குமரன் (31) ஆகியோர் என்பதும், அவர்கள் பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.450 பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு தென்றல்நகர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது சிலர் வட்டமாக அமர்ந்து சூதாடிக்கொண்டு இருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், ஈரோடு லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த ஹரிஹரகோகுல் (வயது 24), பெரியசேமூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (29), முனிசிபல் காலனியை சேர்ந்த ரமேஷ்குமார் (50), ஈ.பி.பி. நகரை சேர்ந்த ஆனந்தன் (35), கே.ஏ.எஸ்.நகரை சேர்ந்த சேட்டு (42), வீரப்பன்சத்திரம் தெப்பகுளம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (37), சத்யா வீதியை சேர்ந்த குமரன் (31) ஆகியோர் என்பதும், அவர்கள் பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.450 பறிமுதல் செய்யப்பட்டது.