செய்திகள்
வாகனங்களை போலீசார் சோதனை செய்தபோது எடுத்த படம்.

இ-பாஸ் இல்லாத வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு- போலீஸ் தீவிர சோதனை

Published On 2020-06-22 16:32 IST   |   Update On 2020-06-22 16:32:00 IST
ஈரோடு மாவட்ட எல்லைக்குள் வரும் பிற மண்டல வாகனங்கள் கடுமையான சோதனைக்கு பின்னர் உரிய இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் 2-வது கட்டமாக கொரோனா பரவல் தொடங்கி உள்ளது. தினசரி யாராவது கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். எனவே ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. சமீபகாலமாக சென்னை மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களால் இந்த பாதிப்பு ஏற்பட்டு வருவதால் வெளியூர் வாகனங்களை முழுமையாக கண்காணிக்க கலெக்டர் சி.கதிரவன், போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் ஆகியோர் உத்தரவிட்டு உள்ளனர். அதன்படி மாவட்ட எல்லை சோதனை சாவடிகள் அதிக போலீசாருடன் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

மாவட்ட எல்லைக்குள் வரும் பிற மண்டல வாகனங்கள் கடுமையான சோதனைக்கு பின்னர் உரிய இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை சோதனை சாவடியில் நேற்று போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Similar News