செய்திகள்
மின்சாரம் நிறுத்தம்

கோபி பகுதியில் 23-ந் தேதி மின்சாரம் நிறுத்தம்

Published On 2020-06-21 08:24 GMT   |   Update On 2020-06-21 08:24 GMT
கோபி பகுதியில் 23-ந் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
கடத்தூர்:

கோபி கோட்டத்துக்கு உள்பட்ட கோபி, மாக்கினாம்கோம்பை துணை மின்நிலையங்களில் வருகிற 23-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.

இதனால் கோபி பஸ் நிலைய பகுதி, மொடச்சூர், பா.வெள்ளாளபாளையம், நஞ்சக்கவுண்டன்பாளையம், குள்ளம்பாளையம், நாதிபாளையம், வடுகபாளையம், வேட்டைக்காரன்கோயில், நாகதேவன்பாளையம், கொரவம்பாளையம், பழையூர், பாரியூர், நஞ்சைகோபி, உடையாம்பாளையம், காசிபாளையம், சிங்கிரிபாளையம், அ.கொடிவேரி, மணியகாரன்பாளையம், மாக்கினாம்கோம்பை, இண்டியம்பாளையம், கொத்துக்காடு, அரசூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

இந்த தகவல் கோபி மின்பகிர்மான வட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News