செய்திகள்
கொரோனா பரிசோதனை

புதுச்சேரியில் இன்று 31 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2020-06-21 03:37 GMT   |   Update On 2020-06-21 03:37 GMT
புதுச்சேரியில் இன்று 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 369 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அம்மாநில முதல்வர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

வெளிமாநில நபர்களுக்கு அனுமதி கிடையாது. ஊருக்குள் வந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும். 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்த வேண்டும் உள்பட பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

என்றாலும் தினந்தோறும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 369 ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News