செய்திகள்
புதுவை கவர்னர் கிரண்பேடி

புதுவை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த கவர்னர் கிரண்பேடி

Published On 2020-06-20 05:21 GMT   |   Update On 2020-06-20 05:21 GMT
புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை தவிர்க்க அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என துணை நிலை கவர்னர் கிரண்பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி:

புதுச்சேரி துணை நிலை கவர்னர் கிரண்பேடி கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்படுகிற ஏறக்குறைய 30 நபர்களை தினந்தோறும் கண்டறிந்து வருகிறோம். இந்த நேரத்தில் நமக்கு அருகில் உள்ள மாநிலமான தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை மேற்கொண்டுள்ளனர். முழு ஊரடங்கை திரும்ப பெறும் போது கொரோனாவின் அளவு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

எனவே தயவு செய்து கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். முக கவசம் அணிதல், சுகாதாரத்தை கடைபிடித்தல், தனிமனித இடைவெளியுடன் செயல்படுத்தல் என்று 3 முறைகளையும் தயவு செய்து பின்பற்ற வேண்டும். நம்மை நாம் பாதுகாப்பதன் வழியாக மற்றவர்களையும் பாதுகாக்க முடியும். நம்முடைய ஒருங்கிணைந்த முயற்சிகளால் இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும். எனவே அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News