செய்திகள்
ஈரோடு அருகே விபத்தில் முதியவர் பலி
ஈரோடு அருகே விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு சுத்தானந்தன் நகரை சேர்ந்தவர் ஜீவா (வயது 66). இவர் நேற்று முன்தினம் இரவு ஈரோடு காவிரி ரோடு நாராயணா வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ, ஜீவா ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஜீவாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி ஜீவா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தியதாக ஆட்டோ டிரைவர் பழனிசாமியை கைது செய்தனர்.
ஈரோடு சுத்தானந்தன் நகரை சேர்ந்தவர் ஜீவா (வயது 66). இவர் நேற்று முன்தினம் இரவு ஈரோடு காவிரி ரோடு நாராயணா வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ, ஜீவா ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஜீவாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி ஜீவா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தியதாக ஆட்டோ டிரைவர் பழனிசாமியை கைது செய்தனர்.