செய்திகள்
கத்திக்குத்து

திருவள்ளூர் அருகே ஆட்டோ டிரைவர் உள்பட 5 பேருக்கு கத்திக்குத்து

Published On 2020-06-14 08:02 GMT   |   Update On 2020-06-14 08:02 GMT
திருவள்ளூர் அருகே ஆட்டோ டிரைவர் உள்பட 5 பேர் கத்தியால் தாக்கப்பட்ட நிலையில் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் கபிலர் நகரை சேர்ந்தவர் டேனியல் (வயது 29). ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் டேனியல் அப்பகுதியில் ஆட்டோவுக்கு அருகில் நின்றபோது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சரவணன் டேனியலிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அவர் தர மறுக்கவே, ஆத்திரமடைந்த சரவணன் டேனியலை கத்தியால் குத்தியுள்ளார். இதைக்கண்டு தடுக்க வந்த அவரது நண்பர்களான தேவராஜ், மகேஷ், பிரசாந்த், ராமு ஆகிய 4 பேரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார்.

இதையடுத்து காயமடைந்த டேனியல் உள்பட 5 பேரும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சரவணனை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News