செய்திகள்
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் காய்கறி, பழக்கடைகளை தினமும் திறக்க அனுமதி- வியாபாரிகள் கோரிக்கை
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் காய்கறி, பழக்கடைகளை தினமும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஊட்டி:
அதன்படி, கடைகள் திறந்து செயல்பட்டு வருகின்றன. கடைகள் முன்பு சமூக இடைவெளிக்கான ஏற்பாடுகள், கைகளை சுத்தப்படுத்த தண்ணீர் மற்றும் சோப்பு வைக்கப்பட்டன. இருப்பினும், ஒரு நாள் விட்டு கடைகளை திறப்பதால் உள்புறத்தில் விற்பனை செய்வதற்காக இருப்பு வைக்கப்பட்டு உள்ள காய்கறி, பழங்கள், பூக்கள் சேதமாகி வருகின்றன.
இதனால் வியாபாரிகள் சேதமான பொருட்களை அப்புறப்படுத்தி விட்டு, நல்லவற்றை எடுத்து விற்பனை செய்கிறார்கள். பூக்களை ஒரு நாளுக்கு மேல் வைத்து விற்பனை செய்ய முடியாது. பொருட்கள் அழுகி வீணாவதால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதனால் அவர்கள் கடைகள் தினமும் திறந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் 1,300 கடைகள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கூட்டம் கூடாமல் இருக்க மார்க்கெட் மூடப்பட்டு காய்கறிகள், பழங்கள், மளிகைக்கடைகள் ஊட்டி மத்திய பஸ் நிலையத்துக்கும், குதிரை பந்தய மைதான வாகன நிறுத்துமிடத்துக்கும் மாற்றப்பட்டு திறந்தவெளி சந்தையாக செயல்பட்டது. அரசு பஸ் இயக்கம் தொடங்கியதாலும், நகரில் வாகன போக்குவரத்து அதிகரித்ததாலும் மேற்கண்ட கடைகள் மீண்டும் மார்க்கெட்டுக்கு மாற்றப்பட்டன.
அங்கு பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க சமூக இடைவெளி விட்டு சுழற்சி முறையில் கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் பழங்கள், காய்கறிகள், பூக்கடைகளை திறக்க ஏ,பி என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது.
அதன்படி, கடைகள் திறந்து செயல்பட்டு வருகின்றன. கடைகள் முன்பு சமூக இடைவெளிக்கான ஏற்பாடுகள், கைகளை சுத்தப்படுத்த தண்ணீர் மற்றும் சோப்பு வைக்கப்பட்டன. இருப்பினும், ஒரு நாள் விட்டு கடைகளை திறப்பதால் உள்புறத்தில் விற்பனை செய்வதற்காக இருப்பு வைக்கப்பட்டு உள்ள காய்கறி, பழங்கள், பூக்கள் சேதமாகி வருகின்றன.
இதனால் வியாபாரிகள் சேதமான பொருட்களை அப்புறப்படுத்தி விட்டு, நல்லவற்றை எடுத்து விற்பனை செய்கிறார்கள். பூக்களை ஒரு நாளுக்கு மேல் வைத்து விற்பனை செய்ய முடியாது. பொருட்கள் அழுகி வீணாவதால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதனால் அவர்கள் கடைகள் தினமும் திறந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:- ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் காய்கறி, பழங்கள் என 200 கடைகள் உள்ளன. மளிகை, துணிக்கடைகள் போன்றவை சுழற்சி முறையில் திறந்தாலும், பொருட்கள் பாதிக்கப்படுவது இல்லை. ஆனால் காய்கறி, பழங்களை பெட்டிகள் அல்லது மூட்டைகளில் வைத்து விட்டு ஒருநாள் விட்டு மறுநாள் கடைகளை திறந்தால் அழுகியும், வெடித்தும் சேதமடைகின்றன. ஏற்கனவே ஊரடங்கு உத்தரவால் வியாபாரம் இன்றி பாதிக்கப்பட்டு உள்ளோம். எனவே பொருட்கள் வீணாவதை தடுக்க தினமும் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.