செய்திகள்
மனவளர்ச்சி குன்றிய பெண் பாலியல் பலாத்காரம்: தந்தை-மகன் கைது
ஜெயங்கொண்டம் அருகே மனவளர்ச்சி குன்றிய பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தந்தை, மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்தவர் குமார்(வயது 45). இவரும், இவரது மகன் காளிதாஸ் என்கின்ற கார்த்திக் (22) என்பவரும் அப்பகுதியில் உள்ள மனவளர்ச்சி குன்றிய 32 வயதுடைய ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த பெண் 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். மேலும் அவர் உடல் நலம் குறைவு ஏற்பட்டு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த பெண்ணின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு தமிழரசி வழக்குப்பதிந்து குமார் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்தவர் குமார்(வயது 45). இவரும், இவரது மகன் காளிதாஸ் என்கின்ற கார்த்திக் (22) என்பவரும் அப்பகுதியில் உள்ள மனவளர்ச்சி குன்றிய 32 வயதுடைய ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த பெண் 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். மேலும் அவர் உடல் நலம் குறைவு ஏற்பட்டு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த பெண்ணின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு தமிழரசி வழக்குப்பதிந்து குமார் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.