செய்திகள்
கைது

அரியலூர் அருகே மது விற்ற பெண் கைது

Published On 2020-06-11 14:12 IST   |   Update On 2020-06-11 14:12:00 IST
அரியலூர் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையிலான போலீசார் கோவிந்தபுத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கோவிந்தபுத்தூர் மேலத்தெரு பகுதியை சேர்ந்த ராமர் மனைவி பூங்கொடி(வயது 37) என்பவர் வீட்டில் சோதனை செய்தனர். இதில் அவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து பூங்கொடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Similar News