செய்திகள்
முக கவசம்

திருமானூர் அருகே மாணவர்களின் வீடுகளுக்கு சென்று முகக்கவசம் வழங்கிய தலைமையாசிரியர்

Published On 2020-06-09 18:24 IST   |   Update On 2020-06-09 18:24:00 IST
திருமானூர் அருகே தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரபா கொரோனா நோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களின் வீடு, வீடாக சென்று முகக்கவசம், சானிடேசர் மற்றும் உணவு பொருட்கள் வழங்கினார்

திருமானூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அண்ணிமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரபா கொரோனா நோய் விழிப்புணர்வுஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களின் வீடு, வீடாக சென்று மாஸ்க் , சானிடேசர் மற்றும் உணவு பொருட்கள் வழங்கினார்

மேலும் அந்த கிராமத்தில் உள்ள தூய்மைபணியாளர்களுக்கும் துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் நிவாரண உணவு பொருட்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவி தமிழரசி தலைமை வகித்தார்.

Similar News