செய்திகள்
கைது

நாராயணசாமி மீது அவதூறு- புதுவை அரசு ஊழியர் கைது

Published On 2020-06-09 17:23 IST   |   Update On 2020-06-09 17:23:00 IST
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் பற்றி அவதூறு வீடியோ வெளியிட்ட அரசு ஊழியர் மீது சைபர் கிரைம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
புதுச்சேரி:

புதுவை வில்லியனூரை அடுத்த உளவாய்க்காலை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 55).

புதுவை அரசு ஊழியரான சந்திரசேகரன் கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். இவர், சமூக வலைதளங்களில் காங்கிரஸ் அரசையும், முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் ஆகியோரை விமர்சித்து அடிக்கடி வீடியோ பதிவு வெளியிட்டு வந்தார்.

இது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகி சூசைராஜ் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரில் அரசு ஊழியரான சந்திரசேகரன் ஜாதி, மத ரீதியாக முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பற்றி பேசி அவதூறு வீடியோ வெளியிட்டு வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்புதல், ஆபாசமாக திட்டுதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சந்திரசேகரனை கைது செய்தனர்.

அவர் கொரோனா மருத்துவ பரிசோதனைக்காக கோவிட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Similar News