செய்திகள்
மோட்டார் சைக்கிள் திருட்டு (கோப்பு படம்)

செந்துறை அருகே 2 விவசாயிகளின் மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2020-06-06 10:54 GMT   |   Update On 2020-06-06 10:54 GMT
செந்துறை அருகே 2 விவசாயிகளின் மோட்டார் சைக்கிள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பெரும்பாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்வராஜ் மற்றும் ஆதிமூலம். இவர்கள் 2 பேரும் நேற்றுமுன்தினம் பெரும்பாண்டி நமங்குணம் சாலையில் உள்ள தங்களது வயலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் 2 மோட்டார் சைக்கிளையும் சாலையோரம் நிறுத்திவிட்டு வயலுக்கு சென்று களை எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் வேலைமுடிந்ததும் வீட்டிற்கு செல்லரோட்டிற்கு வந்து தங்களதுமோட்டார் சைக்கிளை பார்த்த போது அவைகள் மர்மநபர்களால் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அவர்கள் 2 பேரும் செந்துறை போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

இதேபோன்று செந்துறை பகுதிகளில் ஏராளமான இடங்களில் வயல் வேலைகளில் ஈடுபடும் விவசாயிகளின் இருசக்கர வாகனங்களை குறிவைத்து மர்மகும் பல் திருடி வருகிறது இதனால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். ஆகையால் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலையிட்டு இந்த திருட்டு கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News