செய்திகள்
ஆர்ப்பாட்டம்

அரியலூரில் ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-06-06 10:40 GMT   |   Update On 2020-06-06 10:40 GMT
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் ரெயில் நிலைய 1வது நடைமேடையில் எஸ்.ஆர்.எம்.யு, ஏ.ஐ.ஆர்.எப் ஆகியதொழிற் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரியலூர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் ரெயில் நிலைய 1வது நடைமேடையில் எஸ்.ஆர்.எம்.யு, ஏ.ஐ.ஆர்.எப் ஆகியதொழிற் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்.ஆர்.எம்.யூ சங்கத்தின் திருச்சி கோட்ட உதவி செயலர் செல்வகுமார் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், ரெயில்வே துறையை தனியார்மய மாக்குவதை கைவிட வேண்டும், விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடியைக்காரணம் காட்டி 18 மாதத்துக்கான பஞ்சப் படியை நிறுத்துவதை கைவிட வேண்டும், தொழிலாளர்கள் நல லேபர் கோடு என்ற பெயரில் போராடிபெற்ற தொழிலாளர்கள் நல உரிமையை பறிக்கக்கூடாது, இதற்கு முன்னர் இருந்த தொழிலாளர் நலச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News