செய்திகள்
மணல் கடத்தல்

அம்மாபேட்டை அருகே மணல் கடத்திய 2 வேன்கள் பறிமுதல்

Published On 2020-06-01 13:37 GMT   |   Update On 2020-06-01 13:37 GMT
அம்மாபேட்டை அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 2 வேன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அம்மாபேட்டை:

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை வருவாய் சரக பகுதியில் மணல் கடத்தலை தடுக்கும் பொருட்டு கும்பகோணம் சப்-கலெக்டர் வீராசாமி, பாபநாசம் தாசில்தார் கண்ணன், வருவாய் அதிகாரி ராஜ்குமார், வருவாய் உதவியாளர் நேதாஜி உள்ளிட்ட வருவாய்துறையினர் நேற்று அதிகாலை ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது புத்தூர் கிராம பகுதி, கிராம சாலையில் வந்த ஓரு மினிலோடு வேனை வழி மறித்தனர். அதிகாரிகளை கண்டதும் டிரைவர் வேனை நிறுத்தி விட்டு ஓடிவிட்டார். வருவாய்த்துறையினர் வேனை சோதனையிட்டதில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து வேனை பறிமுதல் செய்து அம்மாபேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.

இதேபோல் அம்மா பேட்டை அருகே உக்கடை கிராம பகுதியில் வந்த ஒரு மினிவேனை நிறுத்தியபோது வேனை நிறுத்திவிட்டு டிரைவர் ஓடிவிட்டார். வேனில் அனுமதியின்றி வெண்ணாற்றிலிருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

வேனை பறிமுதல் செய்து அம்மாபேட்டை போலீசில் ஓப்படைத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிந்து டிரைவர்களை தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News