செய்திகள்
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது
செந்துறை அருகே உள்ள அரவங்குறிச்சியில் சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
செந்துறை:
நத்தம் தாலுகா செந்துறை அருகே உள்ள அரவங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சக்தி (வயது 25). இவர், 16 வயது சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்து, பட்டிகுளம் பகுதியில் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த சிறுமியின் பெற்றோர், நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார், சக்தி மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
நத்தம் தாலுகா செந்துறை அருகே உள்ள அரவங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சக்தி (வயது 25). இவர், 16 வயது சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்து, பட்டிகுளம் பகுதியில் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த சிறுமியின் பெற்றோர், நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார், சக்தி மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.