செய்திகள்
தற்கொலை

கூடுவாஞ்சேரியில் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-05-30 16:24 IST   |   Update On 2020-05-30 16:24:00 IST
கூடுவாஞ்சேரியில் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றர்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள கற்பகாம்பாள் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் ரூபிணி (வயது 23). இவர் சிங்கப்பெருமாள்கோவிலை அடுத்த மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 27-ந் தேதி இரவு அவருக்கு மீண்டும் வயிற்று வலி அதிகமானதால் வீட்டில் உள்ள அறையில் உள்தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு நீண்டநேரமாக வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ரூபிணி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

உடனடியாக அவரை மீட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News