செய்திகள்
மீன்சுருட்டி அருகே வாலிபர் தற்கொலை
மீன்சுருட்டி அருகே தூக்குப் போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே பாப்பாக்குடியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 25). இவர் கடந்த 26-ந் தேதி தனது காரில் சொந்த வேலையாக காடுவெட்டி கிராமத்திற்கு சென்றிருந்தார். பின்னர், அங்கிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, டயர் வெடித்து சாலையின் தடுப்புச்சுவரில் கார் மோதி சேதமடைந்தது. கார் சேதமானது குறித்து குடும்பத்தினர் கேள்வி கேட்பார்களே என்று வருத்தப்பட்ட ராம்குமார் தனது வீட்டில் உள்ள அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ராம்குமாரின் தந்தை குமரன் கொடுத்த புகாரின்பேரில், மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து ராம்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.