செய்திகள்
யானைகள்

குடியாத்தம் அருகே காட்டு யானைகள் விரட்டியடிப்பு

Published On 2020-05-29 07:24 GMT   |   Update On 2020-05-29 07:24 GMT
வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பட்டாசு வெடித்து யானைகளை காட்டுக்குள் விரட்டியடித்தனர்.

குடியாத்தம்:

ஆந்திர மாநிலம் பலமனேர் பகுதியில் உள்ள கவுண்டன்யா சரணாலயத்தில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் குடியாத்தம் பகுதியில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

நேற்று முன்தினம் குடியாத்தம் அடுத்த மோடி குப்பம், வலசை, கீழ் கொல்லப்பள்ளி, தனகொண்டபள்ளி பகுதிகளில் உள்ள விவசாய நிலத்தில் 17 காட்டு யானைகள் புகுந்தன.

அங்குள்ள 500க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தியது. அத்துடன் மா மரங்கள் தேக்கு மரங்கள் ஆகியவற்றை பிடிங்கி வீசின.அப்பகுதியில் நேற்று மதியம் முதல் காட்டுயானைகள் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தன.

வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பட்டாசு வெடித்து யானைகளை காட்டுக்குள் விரட்டியடித்தனர்.

ஆந்திர எல்லையோரம் உள்ள காடுகளில் தற்போது காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. மீண்டும் யானைகள் எப்போது வேண்டுமானாலும் தமிழக பகுதிக்கு வரலாம் என கூறப்படுகிறது. அவற்றை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News