செய்திகள்
கொரோனா வைரஸ்

ஈரோடு மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி

Published On 2020-05-29 03:35 GMT   |   Update On 2020-05-29 03:35 GMT
ஈரோடு மாவட்டத்தில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72-ஆக உயர்ந்துள்ளது.
ஈரோடு:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 10,548 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 145-ஆக உள்ளது.
 
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12,762 ஆக அதிகரித்துள்ளது. 6,304 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 106-ஆக உள்ளது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே 71 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 69 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.  
Tags:    

Similar News