செய்திகள்
புதுவையில் பெட்ரோல், டீசலுக்கு கொரோனா வரி

புதுச்சேரியில் பெட்ரோல், டீசலுக்கு கொரோனா வரி விதிப்பு

Published On 2020-05-28 11:03 GMT   |   Update On 2020-05-28 11:03 GMT
புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு கொரேனா வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பொருளாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன. புதுவை அரசுக்கு ஏப்ரல் மாதத்தில் சுமார் ரூ.325 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

வருமானத்தை ஈட்ட பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. முன்னதாக மதுபானங்கள் மீது கொரோனா வரியை விதித்தது. இதனால் அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதும் கொரோனா வரியை விதித்துள்ளது. பெட்ரோல் மீது 5.75 சதவீதமும், டீசல் மீது 3.65 சதவீதமும் விதித்துள்ளது.
Tags:    

Similar News