செய்திகள்
மீனவர்கள்

தடைக்காலம் நிறைவடைந்ததால் மீன்பிடிக்க தயாராகும் மீனவர்கள்

Published On 2020-05-27 14:07 GMT   |   Update On 2020-05-27 14:07 GMT
தடைக்காலம் நிறைவடைந்ததால் புதுவை மீனவர்கள் தங்கள் படகுகளை பழுது பார்த்து, மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
புதுச்சேரி:

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 23-ந் தேதி முதல் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

இதனிடையே வழக்கமான மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15-ந்தேதி தொடங்கியது. இதனால் மீன்பிடி தடைகாலத்தை குறைக்க மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

அதையேற்று 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தை 47 நாட்களாக மத்திய அரசு குறைத்து, ஏப்ரல் 15-ந் தேதி முதல் வருகிற 31-ந் தேதி வரை தடைக்காலமாக மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதையடுத்து புதுவை மீனவர்கள் தங்கள் படகுகளை பழுது பார்த்து, வர்ணம் பூசி, வலைகளை சீரமைத்து மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

புதுவையில் பிடிக்கப்படும் மீன்களில் 75 சதவீதம், கேரளா, தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. மத்திய அரசு அறிவித்துள்ள 4-ம் கட்ட ஊரடங்கு வருகிற 31-ந் தேதியுடன் முடிவடைகிறது.

மீண்டும் ஊரடங்கு தொடர்ந்தால் வெளிமாநில மீன் வியாபாரிகள் புதுவைக்கு வருவதில் சிக்கல் ஏற்படும். இதனால் மீன்பிடித்து வந்தாலும் விற்பனை செய்ய முடியுமா? என மீனவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

Tags:    

Similar News