செய்திகள்
ஆன்லைன் பயிற்சி

கொரோனா ஊரடங்கை எதிர்கொள்ள ஆன்லைன் பயிற்சி முகாம்

Published On 2020-05-27 09:17 GMT   |   Update On 2020-05-27 09:17 GMT
புதுவை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியின் தொழில் முனைவோர் அபிவிருத்தி மையம் கொரோனா ஊரடங்கு காலத்தில் எழுந்துள்ள பிரச்சினைகள், அவற்றை கையாளும் வழிமுறைகள் பற்றி ஆன்லைன் பயிற்சி பட்டறையை நடத்தியது.
புதுச்சேரி:

புதுவை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியின் தொழில் முனைவோர் அபிவிருத்தி மையமும், மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து கொரோனா ஊரடங்கு காலத்தில் எழுந்துள்ள பிரச்சினைகளும், அவற்றை கையாளும் வழிமுறைகளும் என்ற தலைப்பில் ஆன்லைன் பயிற்சி பட்டறையை நடத்தியது.

நிகழ்ச்சிக்கு பாரதிதாசன் கல்லூரி முதல்வர் சுப்ரமணி தலைமை தாங்கினார். அரசு தொழில் முனைவோர் அபிவிருத்தி மையத்தின் இயக்குனர் ராம்குமார் கலந்துகொண்டு, கொரோனா சூழ்நிலைக்கேற்ப மாற்றிக்கொண்டு வாழ்வை வளமாக்குவது எவ்வாறு? என்பது குறித்து பேசினார்.

தமிழ்நாடு பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையின் தலைமை உணவியல் நிபுணர் மீனாட்சி பஜாஜ், நோய் எதிர்ப்பு சக்தியை தருகின்ற உணவு மற்றும் ஊட்டச்சத்து, பாரம்பரிய மசாலா குறித்து பேசினார்.

ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியின் மருத்துவ ஊட்டச்சத்து துறை தலைவர் ஹேமமாலினி, கொரோனா காலத்தின் உணவு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்தும், பாரதிதாசன் கல்லூரி உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை பேராசிரியர் மலர்விழி, கோவிட் காலத்தில் உடற்பயிற்சியின் முக்கியம் குறித்தும் பேசினர்.

3 நாட்கள் நடந்த ஆன்லைன் பயிற்சி பட்டறையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், உணவியல் நிபுணர்கள் வீட்டில் இருந்தவாறே ஆன்லைனில் பேசினர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை பாரதிதாசன் கல்லூரி தொழில் முனைவோர் அபிவிருத்தி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கயல்விழி, அரசு மகளிர் தொழில்நுட்பக்கல்லூரி முதல்வர் ராணி, பேராசிரியர் பத்மராஜ், விரிவுரையாளர் காந்திமோகன் ஆகியோர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News