செய்திகள்
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

புதுவையில் தாய்-மகளுக்கு கொரோனா- மல்லாடி கிருஷ்ணாராவ் தகவல்

Published On 2020-05-26 11:35 GMT   |   Update On 2020-05-26 11:35 GMT
புதுவையில் கணவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றின் மூலமாக மனைவிக்கும், மகளுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
புதுச்சேரி:

புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 32 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் ரெட்டியார்பாளையம் மூகாம்பிகை நகரை சேர்ந்த தாய்-மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே அந்த குடும்பத்தில் கணவருக்கு ஏற்பட்ட தொற்றின் மூலமாக மனைவிக்கும், மகளுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அரும்பார்த்தபுரம், ரெட்டியார்பாளையம் பகுதியில் 9 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இதனால் புதுவை மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

இந்த தகவலை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

Tags:    

Similar News