செய்திகள்
புதுவையில் தாய்-மகளுக்கு கொரோனா- மல்லாடி கிருஷ்ணாராவ் தகவல்
புதுவையில் கணவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றின் மூலமாக மனைவிக்கும், மகளுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 32 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் ரெட்டியார்பாளையம் மூகாம்பிகை நகரை சேர்ந்த தாய்-மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே அந்த குடும்பத்தில் கணவருக்கு ஏற்பட்ட தொற்றின் மூலமாக மனைவிக்கும், மகளுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அரும்பார்த்தபுரம், ரெட்டியார்பாளையம் பகுதியில் 9 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இதனால் புதுவை மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
இந்த தகவலை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 32 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் ரெட்டியார்பாளையம் மூகாம்பிகை நகரை சேர்ந்த தாய்-மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே அந்த குடும்பத்தில் கணவருக்கு ஏற்பட்ட தொற்றின் மூலமாக மனைவிக்கும், மகளுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அரும்பார்த்தபுரம், ரெட்டியார்பாளையம் பகுதியில் 9 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இதனால் புதுவை மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
இந்த தகவலை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.