செய்திகள்
டிரைவருக்கு அரிவாள் வெட்டு

வில்லியனூர் அருகே மது வாங்கி வர மறுத்த தகராறில் டிரைவருக்கு அரிவாள் வெட்டு

Published On 2020-05-26 08:40 GMT   |   Update On 2020-05-26 08:40 GMT
வில்லியனூர் அருகே மது வாங்கி வர மறுத்த தகராறில் டிரைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வில்லியனூர்:

வில்லியனூர் அருகே ஆரியபாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் நந்த கோபால். டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது உறவினர் மகன் வேல்முருகன் மற்றும் அவரது நண்பர் ராமன் ஆகியோர் நேற்று சேந்த நத்தம் மகாலட்சுமி நகரில் தங்களது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ஏற்கனவே மது குடித்து கொண்டிந்த ஆரியபாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன், சவுந்தர், செல்வபாரதி, தர்மா ஆகியோர் தங்களிடமிருந்த மது தீர்ந்து விட்டதால் வேல்முருகனிடம் பணம் கொடுத்து மது வாங்கி வருமாறு கூறினர்.

அதற்கு வேல்முருகன் மதுக்கடையில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் மது வாங்க வர மறுத்து விட்டார். இதனால் ஆத்திமடைந்த கார்த்திகேயன் உள்பட 4 பேரும் சேர்ந்து வேல்முருகனை பீர் பாட்டிலால் தாக்கினர்.

இதில் காயமடைந்த வேல்முருகனை அவரது நண்பர் ராமன் மீட்டு வில்லியனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது பின் தொடர்ந்து வந்த கார்த்திகேயன் மற்றும் சவுந்தர் ஆகியோர் வில்லியனூர் கண்ணகி அரசு பெண்கள் பள்ளி அருகே ராமனை வழி மறித்து சரமாரியாக தாக்கினர்.

இதுபற்றி வேல்முருகன் செல்போன் மூலம் தனது உறவினர் நந்தகோபாலுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து நந்த கோபால் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கார்த்திகேயன் உள்பட 4 பேரிடம் தட்டிக் கேட்டார். அப்போது அவர்கள் நந்தகோபாலை கையால் சரமாரியாக தாக்கினர். இதில் நந்தகோபாலுக்கு முன் பக்க பல் உடைந்தது. மேலும் சவுந்தர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து நந்தகோபாலை வெட்டினார். மேலும் இனிமேல் எங்களிடம் ஏதாவது வம்பு செய்தால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றனர்.

அதோடு கிரிக்கெட் மைதானத்தில் நிறுத்தியிருந்த ராமனின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தனர். வேல்முருகனின் மோட்டார் சைக்கிளை தடியால் அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.

இந்த தாக்குதலில் படுகாய மடைந்த நந்தகோபால், வேல்முருகன் ஆகியோர் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராமன் வில்லியனூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயன், சவுந்தர், செல்வபாரதி, தர்மா ஆகிய 4 பேரையும் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News