செய்திகள்
அரிசி

பெரியார்நகர் பகுதி அதிமுக சார்பில் கால்டாக்சி டிரைவர்களுக்கு இலவச அரிசி

Published On 2020-05-25 12:44 GMT   |   Update On 2020-05-25 12:44 GMT
ஈரோடு பெரியார்நகர் பகுதி அதிமுக சார்பில் மாநகர் பகுதியில் உள்ள கால்டாக்சி டிரைவர்களுக்கு இலவச அரிசி வழங்கும் விழா பெரியார்நகர் பகுதியில் நேற்று நடந்தது.
ஈரோடு:

ஈரோடு பெரியார்நகர் பகுதி அ.தி.மு.க. சார்பில், மாநகர் பகுதியில் உள்ள கால்டாக்சி டிரைவர்களுக்கு இலவச அரிசி வழங்கும் விழா பெரியார்நகர் பகுதியில் நேற்று நடந்தது. விழாவுக்கு பெரியார்நகர் பகுதி செயலாளர் ரா.மனோகரன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, கால்டாக்சி டிரைவர்கள் 150 பேருக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கினார்கள்.

இதில் தமிழ்நாடு அனைத்து கால்டாக்சி உரிமையாளர் நலச்சங்க தலைவர் சிவக்குமார், செயலாளர் தங்கமணி, அ.தி.மு.க. வார்டு செயலாளர் வேல்முருகன், நிர்வாகிகள் மூர்த்தி, கொங்கு சீனு, சார்லி, சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை பெரியார் நகர் பகுதி செயலாளர் மனோகரன் செய்திருந்தார்.
Tags:    

Similar News