செய்திகள்
தற்கொலை

சோமங்கலம் அருகே தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை

Published On 2020-05-13 17:09 GMT   |   Update On 2020-05-13 17:09 GMT
சோமங்கலம் அருகே தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
படப்பை:

காஞ்சீபுரம் மாவட்டம் சோமங்கலத்தை அடுத்த வெங்காடு ஊராட்சி இரும்பேடு கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 32). இவரது மனைவி புவனேஸ்வரி (22). திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. 

இவர்களுக்கு சிவரஞ்சனி (1½) என்ற மகள் உள்ளார். புவனேஸ்வரி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். சத்யமூர்த்தி தாம்பரத்தில் மெக்கானிக் கடை வைத்துள்ளார். கொரோனாவால் கடை மூடப்பட்டுள்ளதால் தற்போது விவசாய வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே சில நாட்களாக தகராறு இருந்து வந்தது. இதேபோல் மாமியாரிடமும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த புவனேஸ்வரி நேற்று முன்தினம் இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சோமங்கலம் போலீசாருக்கு வந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் புவனேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் புவனேஸ்வரிக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News