செய்திகள்
குற்றவாளிகளை கைது செய்யும் முன் போலீசார் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
குற்றவாளிகளை கைது செய்வதற்கு முன்னதாக, மருத்துவ பரிசோதனை செய்து, கொரோனா இல்லை என உறுதியான பின்பே கைது செய்ய வேண்டும் என்று டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சவா போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரி:
திருநள்ளாறு போலீசார் ஒர்க் ஷாப் தீ வைத்து எரித்த வழக்கில் கைது செய்த வாலிபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், போலீஸ் நிலையம் மூடப்பட்டது.
இந்நிலையில் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவத்சவா போலீசாருக்கு அதிரடியாக சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அதில் குற்றவழக்கில் கைது செய்ய முற்படும்போது, போலீசார் கையுறை, முகக்கவசம் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொள்ள வேண்டும். கைது செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால், எக்காரணம் கொண்டும் குற்றம் சாற்றப்பட்டவரை தொடக்கூடாது.
கைது செய்வதற்கு முன்னதாக, மருத்துவ பரிசோதனை செய்து, கொரோனா இல்லை என உறுதியான பின்பே கைது செய்ய வேண்டும். குற்றத்தின் அடிப்படையில் தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே கைது செய்ய வேண்டும். அதுவரை குற்றவழக்கில் உள்ளவரை தனிமைப்படுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.
திருநள்ளாறு போலீசார் ஒர்க் ஷாப் தீ வைத்து எரித்த வழக்கில் கைது செய்த வாலிபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், போலீஸ் நிலையம் மூடப்பட்டது.
இந்நிலையில் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவத்சவா போலீசாருக்கு அதிரடியாக சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அதில் குற்றவழக்கில் கைது செய்ய முற்படும்போது, போலீசார் கையுறை, முகக்கவசம் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொள்ள வேண்டும். கைது செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால், எக்காரணம் கொண்டும் குற்றம் சாற்றப்பட்டவரை தொடக்கூடாது.
கைது செய்வதற்கு முன்னதாக, மருத்துவ பரிசோதனை செய்து, கொரோனா இல்லை என உறுதியான பின்பே கைது செய்ய வேண்டும். குற்றத்தின் அடிப்படையில் தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே கைது செய்ய வேண்டும். அதுவரை குற்றவழக்கில் உள்ளவரை தனிமைப்படுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.