புதுவை நகர பகுதியில் நாளை மின் நிறுத்தம்
புதுச்சேரி:
புதுவை மரப்பாலம் மற்றும் வெங்கட்டாநகர் துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே புதுவை நகர பகுதி முழுவதும் (கடற்கரை சாலை முதல் எல்லைப் பிள்ளைச்சாவடி மற்றும் அரியாங்குப்பம் முதல் முத்தியால்பேட்டை வரையுள்ள பகுதிகள்) காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இதேபோல் நேத்தாநகர், எம்.ஜி.ஆர்.நகர், ரமணர்நகர், சிவா விஷ்ணு நகர், அன்சாரி துரைசாமி நகர், ஜெயம்நகர், பி.எஸ்.சி. பேங்க் காலனி, ஜோதி நகர், வாரியார் நகர், காயத்திரி நகர், ஜான்பால் நகர் ஆகிய பகுதிகளில் காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரையும், அக்காசாமி வீதிக்கும் குபேர் சாலைக்கும் இடைப்பட்ட பகுதி, சின்னையாபுரம் சாலை, குபேர் பாடசாலை பகுதி, அப்பாவுநகர் பகுதி களில் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இந்த தகவலை மின்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.