செய்திகள்
ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு நாளை தொடங்குகிறது
ஜிப்மர் மருத்துவமனை நாளை (வெள்ளிக்கிழமை) குறிப்பிட்ட வெளிப்புற நோயாளிகள் பிரிவு சேவைகளை தொடங்குகிறது.
புதுச்சேரி:
ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கடலூரை சேர்ந்த 3 பேருடன் தொடர்பில் இருந்த 46 பேர்களில் 44 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடந்தது. அவர்களுக்கு இதுவரை வைரஸ் தொற்று இல்லை. மீண்டும் மறு பரிசோதனை செய்யப்படும்.
இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இல்லாத 61 பேரை கண்டறிந்து சுய கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுக்கு நோய் அறிகுறி இல்லை. ஜிப்மர் மருத்துவமனை நாளை (வெள்ளிக்கிழமை) குறிப்பிட்ட வெளிப்புற நோயாளிகள் பிரிவு சேவைகளை தொடங்குகிறது. இந்த சேவைகள் தொலைபேசி மற்றும் காணொலியில் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் தரப்படும்.
சேவை வேண்டுவோர் ஜிப்மரின் 0413- 2298200 என்ற எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும். மருத்துவர் உங்களுக்கு தொலைபேசி, காணொலி மூலம் சிகிச்சை தரும் தேதி பதிவு செய்துள்ள தொலைபேசியில் குறுந்தகவலாக தரப்படும்.
நேரில் வரவேண்டிய நோயாளிகளுக்கான நாள், நேரம் விவரமும் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அந்த நாளில் நோயாளியும், அவருடன் ஒருவர் மட்டும் ஜிப்மருக்குள் அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு செய்தோருக்கு முன்னதாக நோய் தொற்று உள்ளதா.? என பரிசோதித்த பிறகே குறிப்பிட்ட சிகிச்சை வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கடலூரை சேர்ந்த 3 பேருடன் தொடர்பில் இருந்த 46 பேர்களில் 44 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடந்தது. அவர்களுக்கு இதுவரை வைரஸ் தொற்று இல்லை. மீண்டும் மறு பரிசோதனை செய்யப்படும்.
இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இல்லாத 61 பேரை கண்டறிந்து சுய கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுக்கு நோய் அறிகுறி இல்லை. ஜிப்மர் மருத்துவமனை நாளை (வெள்ளிக்கிழமை) குறிப்பிட்ட வெளிப்புற நோயாளிகள் பிரிவு சேவைகளை தொடங்குகிறது. இந்த சேவைகள் தொலைபேசி மற்றும் காணொலியில் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் தரப்படும்.
சேவை வேண்டுவோர் ஜிப்மரின் 0413- 2298200 என்ற எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும். மருத்துவர் உங்களுக்கு தொலைபேசி, காணொலி மூலம் சிகிச்சை தரும் தேதி பதிவு செய்துள்ள தொலைபேசியில் குறுந்தகவலாக தரப்படும்.
நேரில் வரவேண்டிய நோயாளிகளுக்கான நாள், நேரம் விவரமும் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அந்த நாளில் நோயாளியும், அவருடன் ஒருவர் மட்டும் ஜிப்மருக்குள் அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு செய்தோருக்கு முன்னதாக நோய் தொற்று உள்ளதா.? என பரிசோதித்த பிறகே குறிப்பிட்ட சிகிச்சை வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.