செய்திகள்
திருவண்ணாமலையில் இருந்து புதுவைக்கு கஞ்சா கடத்திய கும்பல் கைது
திருவண்ணாமலையில் இருந்து மினி வேனில் கொரோனா ஸ்டிக்கர் ஒட்டி புதுவைக்கு கஞ்சா கடத்தி வந்து விற்ற கும்பலை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை வேல்ராம்பட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகே 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக முதலியார்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் நேற்று மாலை சம்பவ இடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறியதால் போலீசார் அவர்களின் சட்டை பையில் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் கஞ்சா பாக்கெட்டுக்களை சட்டை பையில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் முருங்கப்பாக்கம் சேத்திலால் நகரை சேர்ந்த அன்பரசன் (வயது20), முருங்கப்பாக்கம் குமாரவேலு நகரை சேர்ந்த சிவகாஷ்(21) என்பதும், இவர்கள் நைனார்மண்டபத்தை சேர்ந்த கீர்த்திவாசன் (19) என்பவருடன் சேர்ந்து மினிவேனில் கொரோனா அவசர ஸ்டிக்கரை ஒட்டி திருவண்ணாமலையிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து புதுவையில் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு விற்று வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அன்பரசன், சிவகாஷ் மற்றும் கீர்த்தி வாசன் ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா கடத்தலுக்கு உடந்தையாக இருந்த வேல்ராம்பட்டை சேர்ந்த மினி வேன் டிரைவர் ஜான்பாட்ஷாவையும் கைது செய்தனர். அதோடு மினிவேன், மோட்டார் சைக்கிள், 3 செல்போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
புதுவை வேல்ராம்பட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகே 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக முதலியார்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் நேற்று மாலை சம்பவ இடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறியதால் போலீசார் அவர்களின் சட்டை பையில் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் கஞ்சா பாக்கெட்டுக்களை சட்டை பையில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் முருங்கப்பாக்கம் சேத்திலால் நகரை சேர்ந்த அன்பரசன் (வயது20), முருங்கப்பாக்கம் குமாரவேலு நகரை சேர்ந்த சிவகாஷ்(21) என்பதும், இவர்கள் நைனார்மண்டபத்தை சேர்ந்த கீர்த்திவாசன் (19) என்பவருடன் சேர்ந்து மினிவேனில் கொரோனா அவசர ஸ்டிக்கரை ஒட்டி திருவண்ணாமலையிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து புதுவையில் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு விற்று வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அன்பரசன், சிவகாஷ் மற்றும் கீர்த்தி வாசன் ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா கடத்தலுக்கு உடந்தையாக இருந்த வேல்ராம்பட்டை சேர்ந்த மினி வேன் டிரைவர் ஜான்பாட்ஷாவையும் கைது செய்தனர். அதோடு மினிவேன், மோட்டார் சைக்கிள், 3 செல்போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.