செய்திகள்
புதுவை வந்த பழ வியாபாரிக்கு கொரோனா- சுகாதாரத்துறை தகவல்
புதுவையில் மாம்பழம் விற்க வந்த தேனி மாவட்ட வியாபாரிக்கு கொரோனா நோய் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரி:
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
ஊரடங்கில் தளர்வு காரணமாக கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மக்களும் கட்டுபாடாக இருப்பது வரவேற்கதக்கது. மாகி பகுதியில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு நோய் தொற்று இல்லை.
இவ்வாறு மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.
சுகாதாரதுறை இயக்குனர் மோகன்குமார் கூறும்போது,
புதுவையில் மாம்பழம் விற்க வந்த தேனி மாவட்ட வியாபாரிக்கு கொரோனா நோய் இருப்பதாக கண்டறியப்பட்டு தேனியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருடன் புதுவையில் தொடர்பில் இருந்த 5 வியாபாரிகளை கண்டறிந்து பரிசோதித்து தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.