செய்திகள்
கேளம்பாக்கம் அருகே ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி
கேளம்பாக்கம் அருகே ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்போரூர்:
கேளம்பாக்கத்தை அடுத்த சிருசேரியில் மென்பொருள் தொழிற்பூங்கா உள்ளது. இங்கு இந்தியன் வங்கியும், அதன் அருகிலேயே ஏ.டி.எம். மையமும் செயல்பட்டு வருகிறது.
நேற்று நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா வயர்களை அறுத்தனர். பின்னர். ஏ.டி.எம். எந்திரத்தில பணம் வைக்கும் பகுதியில் கள்ளச் சாவி போட்டு திறக்க முயன்றனர்.
இதற்குள் கொள்ளை முயற்சி குறித்து மும்பையில் உள்ள வங்கியின் தலைமையகத்துக்கு எச்சரிக்கை வந்தது. உடனடியாக அவர்கள் கேளம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்தபோது கொள்ளையர்கள் தப்பி சென்று இருப்பது தெரிந்தது. ஏ.டி.எம். எந்திரத்தை திறக்க முடியாததால் பல லட்சம் பணம் தப்பியது.