செய்திகள்
ராணிப்பேட்டையில் 50 குடும்பத்தினருக்கு மளிகை பொருட்கள்- காந்தி எம்.எல்.ஏ. வழங்கினார்
ராணிப்பேட்டையில் 50 குடும்பத்தினருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை காந்தி எம்.எல்.ஏ. வழங்கினார்.
ராணிப்பேட்டை:
வாலாஜா ஒன்றியம் மாந்தாங்கல் அடுத்த பத்மா நகர்பகுதியில் உள்ள ஏழை எளிய நலிந்த 50 குடும்பத்தினருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை திமுக மாவட்ட செயலாளர் காந்தி எம்.எல்.ஏ. வழங்கினார்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தாமரை, சித்ரா, ஒன்றிய செயலாளர் ஷேசா வெங்கட் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத் வழக்கறிஞர் சிவக்குமார், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முரளி ஆகியோர் உடனிருந்தனர்.