செய்திகள்
மோசடி

புதுவை ஜவகர் நகரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 1 1/2 கோடி மோசடி செய்த கணவன் மனைவி

Published On 2020-04-22 11:05 GMT   |   Update On 2020-04-22 11:05 GMT
புதுவை ஜவகர் நகரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 1 1/2 கோடி மோசடி செய்த கணவன் மனைவியை சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை பூமியான்பேட்டை ஜவகர்நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் வெங்கடேசன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி வசந்தி (வயது43). இவர் அதே பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வரும் பாஸ்கர் மற்றும் அவரது மனைவி மஞ்சுளா ஆகியோரிடம் மாத ஏலச் சீட்டு கட்டி வந்தார். இதேபோல் அவர்களிடம் வசந்தி உள்பட 46 பேர் ஏலசீட்டு கட்டி வந்தனர்.

இதற்கிடையே ஏலச்சீட்டு முடிந்தும் வசந்திக்கு அதற்குண்டான தொகை ரூ.1லட்சத்து 17 ஆயிரத்தை கொடுக்காமல் மஞ்சுளாவும் அவரது கணவர் பாஸ்கர் காலம் கடத்தி வந்தனர்.

இதுபோல் அவர்கள் ஏலச்சீட்டு கட்டிய பல பேருக்கு ரூ.1½ கோடி வரை கொடுக்காமல் இருந்து வந்தனர்.

தற்போது ஊரடங்கு உத்தரவினால் வேலைக்கு செல்ல முடியாமல் வசந்தியின் குடும்பத்தினர் கஷ்டப்பட்டதால் ஏலச்சீட்டு பணத்தை கொடுக்கும்படி வசந்தி மஞ்சுளா தம்பதியினரிடம் கேட்டார். ஆனால் அவர்கள் பணத்தை தராமலும், தகுந்த பதிலையும் கூற வில்லை.

இதைய டுத்து வசந்தி ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். இந்த புகார் மீது விசாரணை நடத்த ரெட்டியார்பாளையம் போலீசார் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு பரிந்துரை செய்தனர். இதன்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குபதிவு செய்து ஏலச்சீட்டு நடத்தி ரூ.1½ கோடி மோசடி செய்த மஞ்சுளா மற்றும் அவரது கணவர் பாஸ்கர் ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News