செய்திகள்
கோப்பு படம்

2 மாத சம்பளத்தை வழங்காவிட்டால் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் உண்ணாவிரதம்

Published On 2020-04-22 09:26 GMT   |   Update On 2020-04-22 09:26 GMT
2 மாத சம்பளத்தை வழங்காவிட்டால் புதுவை நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து துப்புரவு பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறியுள்ளனர்.
புதுச்சேரி:

புதுவை நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து துப்புரவு பணியாளர்கள் நலச்சங்க துணைசெயலாளர் ஞானமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் புதுவையிலும் ஊரடங்கு அமலில் உள்ளது.

புதுவையில் மக்கள் வரி செலுத்துவதில் 3 மாதங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இதனால் பஞ்சாயத்து நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே கொம்யூன் பஞ்சாயத்துக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து நிலுவையில் உள்ள 2 மாத சம்பளத்தை வழங்கிடவேண்டும்.புதுவை அரசு தனியார் காண்டிராக்ட் குப்பை வாரும் நிறுவனத்திற்கு மாநில் நிதியினை வழங்குகின்றனர்.தனியார் நிறுவன துப்புறவு ஊழியர்களுக்கு குறைவான சம்பளமே வழங்குகின்றனர்.

மேலும் அவர்களுக்கு கையுறை,முககவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை.எனவே நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு நிலுவை சம்பளத்தை உடனே வழங்க வேண்டும்.மேலும் இதே நிலை நீடித்தால் சமூக இடைவெளியை பின்பற்றி கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News