செய்திகள்
பிஆர்டிசி ஊழியர் சம்பள பணம் வழங்க கோரிக்கை

பி.ஆர்.டி.சி. ஊழியர்களுக்கு 2 மாத சம்பளம் வழங்க வேண்டும்- சங்கபொதுச்செயலாளர் கோரிக்கை

Published On 2020-04-22 14:51 IST   |   Update On 2020-04-22 14:51:00 IST
பி.ஆர்.டி.சி. ஊழியர்களுக்கு 2 மாத சம்பளம் வழங்க வேண்டும் என்று புதுவை சாலை போக்கு வரத்து கழக ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வேலய்யன் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி:

புதுவை சாலை போக்கு வரத்து கழக ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வேலய்யன் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2 மாதங்களாக பி.ஆர்.டி.சி. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காமல் உள்ளது. கொரோனா ஊரடங்கிலும் துப்புரவு பணியாளர்களை பணிக்கு அழைத்து வருவது, இலவச அரிசியை அந்தந்த தொகுதிகளுக்கு கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட பல பணிகளை செய்து வருகின்றனர்.

மேலும் சம்பந்தபட்ட துறையில் ஓட்டுனர்கள் இருந்தும் பி.ஆர்.டி.சி. ஓட்டுனர்களும், நடத்துனர்களும் இரவு,பகல் பாராது பணி செய்து வருகின்றனர்.

எனவே இதனை கருத்தில் கொண்டு கடந்த 2 மாதத்திற்கான சம்பளத்தை வழங்க ஏற்கனவே முதல்-அமைச்சர், போக்கு வரத்து துறை அமைச்சர், போக்குவரத்து துறை செயலாளர்,பி.ஆர்.டி.சி., மேலாண்மை இயக்குநர் ஆகியோருக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே அந்த மனுவை மறுபரிசீலனை செய்து பி.ஆர்.டி.சி. ஊழியர்களுக்கு 2 மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News