செய்திகள்
மரணம்

ஒரகடம் அருகே வட மாநில வாலிபர் மூச்சு திணறலால் உயிரிழப்பு

Published On 2020-04-21 14:27 GMT   |   Update On 2020-04-21 14:27 GMT
ஒரகடம் அருகே வட மாநில வாலிபர் திடீர் மூச்சு திணறு காரணமாக உயிரிழந்தார், மேலும் கொரோனா தொற்றால் இறந்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் கிப்ருல் இஸ்லாம் (வயது 20). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவருக்கு காய்ச்சல், மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து உடன் பணிபுரிந்து வருபவர்கள் இவரை ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர், சிறிது நேரத்திலே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் இறந்த நபருக்கு கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா? என அவருடைய ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு ஆஸ்பத்திரியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் இதுகுறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் இறந்ததற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News