செய்திகள்
பரிசோதனை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ‘ரேபிட்கிட்’டில் பரிசோதனை தொடக்கம்

Published On 2020-04-20 14:02 IST   |   Update On 2020-04-20 14:02:00 IST
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தாக்குதலை கண்டுபிடிக்க வழங்கப்பட்டுள்ள ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் மூலம் பரிசோதனை தொடங்கியது.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தாக்குதலை கண்டுபிடிக்க வழங்கப்பட்டுள்ள ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்வதை காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் பொன்னையா பார்வையிட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சுகாதாரத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ள 300 ரேபிட் டெஸ்ட் கிட்டில் காஞ்சிபுரம் பெருநகராட்சி பகுதிக்கு 50, காவல்துறைக்கு- 50 தூய்மை பணியாளர்களுக்கு -65, சுகாதாரப் பணியாளர்களுக்கு- 33 என காஞ்சிபுரம் நகராட்சி பகுதிக்கு 198-ம், மொளச்சூர் பகுதிக்கு - 51, நந்தம்பாக்கம் பகுதிக்கு 51-ம் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரசால் 9 பேர் பாதிக்கப்பட்டு 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் 1060 பேர் சுகாதாரத்துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Similar News