செய்திகள்
மஞ்சள், வேப்பிலை கலந்த தண்ணீரில் கை கழுவும் காட்சி.

மஞ்சள், வேப்பிலை கலந்த தண்ணீரில் கைகளை கழுவினால்தான் கிராமத்துக்குள் அனுமதி

Published On 2020-04-17 12:27 IST   |   Update On 2020-04-17 12:27:00 IST
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊருக்குள் செல்லும் நபர்கள் அனைவரும் மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்த தண்ணீரில் தங்கள் கைகளை கழுவி சுத்தம் செய்த பின்னரே ஊருக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
காஞ்சிபுரம்:

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி காஞ்சிபுரம் நகராட்சியில் உள்ள 51 வார்டுகளுக்கு உட்பட்ட அனைத்து தெருக்களும் மூடப்பட்டு, அவசர தேவைகளுக்கு ஒரு வழி பாதை மட்டும் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு கிராமத்திலும் அனைத்து தெருக்கள் மூடப்பட்டு, ஊருக்குள் செல்ல பெரிய தெரு வழி மட்டும் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதி மக்கள் தெருவின் முகப்பில் பெரிய பேரலில் மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்த தண்ணீர் வைத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊருக்குள் செல்லும் நபர்கள் அனைவரும் மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்த தண்ணீரில் தங்கள் கைகளை கழுவி சுத்தம் செய்த பின்னரே ஊருக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்களிலும் மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்த தண்ணீர் தெளிக்கப்படுகிறது. அத்துடன் அந்த தெரு முழுவதும் மஞ்சள், வேப்பிலை கலந்த தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.

Similar News