செய்திகள்
தெருக்கள் மூடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

காஞ்சிபுரம் நகராட்சியில் 51 வார்டுகளில் தெருக்கள் மூடல்

Published On 2020-04-15 22:14 IST   |   Update On 2020-04-15 22:14:00 IST
காஞ்சிபுரம் நகராட்சியில் 51 வார்டுகளில் தெருக்கள் மூடி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
காஞ்சிபுரம்:

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஊரடங்கு உத்தரவை மீறி பொதுமக்கள் தேவையின்றி வெளியேறுவதை தடுக்கும் வகையில், காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளில் உள்ள பெரும்பாலான தெருக்களில் கம்புகள் கொண்டு தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தெருக்களில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மற்றும் அவசர தேவைக்காக ஒரு வழிபாதை மட்டும் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Similar News