செய்திகள்
தற்கொலை

கோபி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2020-03-08 13:57 GMT   |   Update On 2020-03-08 13:57 GMT
கோபி அருகே உடல்நிலை பாதிப்பு காரணமாக இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோபி:

கோபி அருகே உள்ள கரட்டடிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. கூலித்தொழிலாளி. இவரது மகள் ரிதியா (வயது 21). இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ரிதியா வேதனையுடன் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த ரிதியா தற்கொலை செய்ய முடிவு எடுத்து வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடலில் தனக்குத்தானே ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு கோபியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ரிதியா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கோபி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News