செய்திகள்
விபத்து பலி

ஆப்பக்கூடல் அருகே லாரி மோதி முன்னாள் ஊராட்சி தலைவர் பலி

Published On 2020-03-03 15:21 IST   |   Update On 2020-03-03 15:21:00 IST
ஆப்பக்கூடல் அருகே லாரி மோதி முன்னாள் ஊராட்சி தலைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆப்பக்கூடல்:

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஆப்பக்கூடல் கூத்தம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (57). ஆப்பக்கூடல் மூங்கில் பட்டி பகுதியில் பந்தல், மைக் செட் கடை நடத்தி வந்தார்.

இவர் மூங்கில் பட்டி பஞ்சாயத்து முன்னாள் துணை தலைவராக இருந்தவர் ஆவார். நேற்று மதியம் 2 மணிக்கு இவர் ஆப்பக்கூடலில் இருந்து அத்தாணிக்கு வேலை நிமித்தமாக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

கருவல்வாடி புதூர் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது அத்தாணியில் இருந்து பவானி சாலையில் ஆப்பக்கூடல் நோக்கி வேகமாக வந்த லாரி குப்புசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலே பலியானார். இது குறித்த தகவல் கிடைத்ததும் ஆப்பக்கூடல் போலீசார் அங்கு விரைந்து வந்து குப்புசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர.

விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் கர்நாடக மாநிலம் பண்டள்ளி கிராமத்தை சேர்ந்த அப்துல் முஷீர் (28) என்பவரை கைது செய்தனர்.

இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News